AusTamilNews

Home / RIP Notices

Siththy

(- to 13/04/2020)

அன்புத் தமிழ் உறவுகளே!

எனது நகரில் பல ஆண்டுகளாக வசித்து வரும், எங்கள்
உறவுமுறையான இலங்கைத் தமிழ் குடும்பம் கோவிட்-19 கொல்லுயிரி நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தக் குடும்பத்தின் தந்தை பிரம்டன் வைத்தியசாலையில் இரண்டு வாரகாலத்திற்கு மேலாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுய நினைவுகள் அற்ற நிலையில் தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ளார். தாயார் ஒரு வாரத்திற்கு முன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு.. இன்றைய தினம் மதியம் மரணமாகியுள்ளதாக அறிமுடிகிறது.

3 பெண் பிள்ளைகளைக் கொண்ட இந்த குடும்பத்தில், பிள்ளைகள் அனைவருக்கும் நோய்ப் பாதிப்பு உள்ளாதாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மூவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தந்தையார் விரைவில் குணமாகி வீடுதிரும்ப அனைவரும் வேண்டுவோமாக.!!

இந்த நோய் வெறும் வேடிக்கையானதல்ல; எம்மில் பலர் இந்நோயை பெரும் விடயமாகக் கருதவில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தமிழர் சமூகத்தொற்குள்ளும் இருக்கிறார்கள். பலர் வெளிப்படுத்தவில்லை என்பது நிச்சயம். தேவையற்ற வேலைகளுக்கு வெளியே செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உணவுத் தேவைகளுக்காக ஒருவர் மட்டும் பாதுகாப்பு முறைகளைச் சரிவர கையாண்டு வெளியே சென்றுவாருங்கள். முடிந்தவரை வியாபார நிலையங்களில் செலவிடும் நேரங்களைக் குறையுங்கள்