சற்றுமுன் மேலும் ஒரு ஈழத் தமிழர் லண்டனில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார், என அதிர்வு இணையம் அறிகிறது. யாழ் கச்சாய் வீதி சாகவச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் என்பவரே இன்று இறந்துள்ளார். இவர் லண்டன் குவீன்ஸ் பெரியில் வாழ்ந்து வந்த நிலையில், கொடிய கொரோனா தொற்றால் இறந்துள்ளார். அனந்தனின் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திப்போமாக