உலகை அச்சுறுத்திவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லண்டனில் மற்றொரு புலம்பெயர் தமிழரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் உரும்பிராய் கிராமத்தினை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் வசித்துவரும் 58 வயதுடைய இரண்டுபிள்ளைகளின் தந்தையான உதயகுமார் மருதலிங்கம் என்பவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.