யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவஞானம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(கனடா), சிவசங்கர்(கனடா), காலஞ்சென்ற சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வேந்திரன், கமலவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமலிங்கம், கணேசலிங்கம் மற்றும் கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சபாலிங்கம், யோகலிங்கம்(லண்டன்), ஞானாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, ஜெயதேவி, சோமேஸ்வரானந்தன், பவானி, ரேணுகா, பரராஜலிங்கம், புனிதவதி, காலஞ்சென்ற சுசிலாதேவி, குகநேசன், குமரேசன், மங்களேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
சுஜித்தா, கபிலன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்