சண்டிலிப்பாய் மண்டுமண்டையைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி மற்றும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பத்மாவதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 2 ஒக்ரோபர் 2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அளவெட்டி நாகமணி பாலசுப்பிரமணியம் (பொதுச்செயலாளர் - அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியாவார். இவர் காலஞ்சென்ற சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் ஐயாத்துரை, இரத்தினம் பஞ்சாட்சரம், மருத்துவர் பொன்னம்பலம், புவனேஸ்வரி குணரத்தினம், சபாரத்தினம் மற்றும் உரும்பிராயில் வசிக்கும் சிவசோதி சிவலிங்கம் ஆகியோரின் சகோதரியுமாவார்.
இவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களான விக்னேஸ்வரன் (சிட்னி; AL 1978), சிறீஸ்கந்தராஜா (சிட்னி; AL 1981), கிருபாகரன் (சிட்னி; AL 1982), பாலசாந்தி (நோர்வே; AL 1985), பத்மராணி (ஜேர்மனி; AL 1986), கேதீஸ்வரி (இங்கிலாந்து; AL 1989), கேதீஸ்வரன் (சிட்னி; AL 1990), பாஸ்கரன் (உரும்பிராய்; AL 1991), தமிழ்ச்செல்வன் (சிட்னி; AL 1993) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுபானந்தி (சிட்னி), பவானி (சிட்னி), சிவகலை (சிட்னி), அகிலன் (நோர்வே; AL 1980), வைத்தியநாதன் (ஜேர்மனி; AL 1980), தயாகரன் (இங்கிலாந்து; AL 1986), நிரஞ்சனா (சிட்னி), சுபத்திரா (உரும்பிராய்), மிதிலா (சிட்னி) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும் ஆவார்.
அன்னார் தான்யா, அன்யா, திவ்யா, சுஜன், சுஜி, யுவன் ஆகியோரின் அம்மம்மாவும் சமந்தா, இனியன், அங்குசன், அகலவன், புராதனி, அபிலக்சன், கனியமுதன், எழில், சரண்யன், யாழவன், தரணி, இலக்கியன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் Minchunbury Pine Grove Park (Kington Street, Minchinbury) West Chapel மண்டபத்தில் 6 ஒக்ரோபர் 2020 (செவ்வாய்) அன்று காலை 12:30 மணிக்கு இறுதி அஞ்சலியுடன் ஆரம்பிக்கும். பிற்பகல் 1:30 மணிக்கு ஆரம்பிக்கும் சமயச் சடங்குகளைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடலுக்கு தகனக்கிரியை செய்யப்படும். கோவிட்19 விதிகளுக்கமைய இறுதிக்கிரியை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.