AusTamilNews
Share this post
பிரான்சில் கொரோனாவால் யாழ் சிறுப்பிட்டியைச் சேர்ந்த பெண் பலி!யாழ்.சிறுப்பிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE (93330)
இல் வசித்துவந்தவருமான சசிதேவி சதீஸ்குமார் (வயது 46) அவர்கள் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 11.04.2020 நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றிற்கு இலக்காகி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார். மூன்று பிள்ளைகளின் தாயாரான இவரின் இரு பிள்ளைகள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகிக் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.