தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த திரு நாகராஜா (சோதி) அவர்கள் இன்று காலமாகிவிட்டார். கொல்லுயிரி நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த இலங்கைத் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் இறப்பு.
கடந்த திங்கள்கிழமை மனைவி வைத்தியசாலையில் இறந்தார். இன்று காலை கணவரும் வைத்தியசாலையில் சிகிச்சைகள் எவையும் பலனின்றி இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் இன்று (13.04.2020) திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இவர்களின் பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது