AusTamilNews

Home / RIP Notices

திரு.சுப்ரமணியம் ஜெயசீலன்

(- to 18/09/2020)

ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் அதிர்ச்சிதரும் வகையில் ஒரு தமிழ் மகனை இழந்திருக்கிறது. மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும்  "குயசை ஊழவவயபந" சங்கரப்பிள்ளை வீதி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வசித்தவருமாகிய திரு.சுப்ரமணியம் ஜெயசீலன் அவர்கள்  மரணமடைந்துள்ளார்.  பாடசாலைக்காலத்தில் தலைசிறந்த மாணவனாக விளங்கிய இவர், பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிக்காண்பித்தவர்.  கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்தது மாத்திரமல்லாமல், சிரேஷ்ட மாணவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர். "சுந்தரர்" இல்லத் தலைவர்,பூப்பந்தாட்ட அணி - மெய்வல்லுனர் அணித்தலைவர். உதைபந்தாட்டத்தில் Goal Keeper என்று பல்வேறு விளையாட்டு துறைகளில் பிரகாசித்தவர்.   புலம்பெயர்ந்து வந்த பின்னரும் மானிப்பாஷ் பரீஷ் விளையாட்டு கழகத்தின் ஊடாக சமூக மேம்பாட்டு பணிகளில் தொடர்ந்தும் தன்னை ஈடுபடுத்தியிருந்தவர்

அவர் வீட்டில் தனியாக இருந்த சமயமே வீழ்ந்து காயமுற்று இரத்தத்தில் மூழ்கி மயக்கமுற்ற இருந்தார் நான்கு மணிநேரத்தின் பின் அவரது இல்லத்தில் வதியும் ஒருவரால் காணப்பட்டு ambulance மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மூளை சத்திரசிகிச்சை செய்யப்பட்டு life support இல் 5 நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு நினைவுதிரும்பாத நிலையில்  
காலமானார். 

மனைவி மகன் நீண்ட நாட்களாக இலங்கையிலேயே வசித்து வருகின்றனர். தற்பொழுது அவரது உடலம் இறுதிக்கிரியைகளுக்காக இலங்கைக்கு அவரது மனைவியின் முயற்சியில் கொண்டு செல்லப்படுகிறது.

மனைவி காயத்திரி அவர்கள் இன்பத்தமிழ் ஒலியின் அறிவிப்பாளராகவும் 99-2001 இல் பணிபுரிந்தவர்.